இரவில் சத்தம் போடாத கணினி வேண்டுமா? ஏப்ரல் 6, 2008
Posted by உதய தாரகை in Software, Windows.add a comment
கணினியில் காணப்படும் ஒலிபெருக்கிகளை off செய்து வைத்தால் அதிலிருந்து வரும் சத்தங்கள் எமக்கு ஒருபோதும் கேட்காது. இதனை நாம் கைமுறையாக (manually) ஒலிபெருக்கியை off செய்து கொள்ளலாம். இந்த வேலையை தன்னியக்கமாகவே செய்யக் கூடிய ஏதாவது நிலை இருந்தால் எப்படியிருக்கும். நன்றாகத்தான் இருக்கும் தானே..
அதற்கும் ஒரு மென்பொருள் உள்ளது. இதனைப் பயன்படுத்தி எமது கணினியில் காணப்படும் Sound ஐ mute செய்து கொள்ள முடியும். இவ்வாறு Mute செய்தால் கணினியிலிருந்து சத்தமே வராது. இந்த விடயம் நடக்க வேண்டிய நேரத்தை குறித்த மென்பொருளில் வழங்கினால் மிகச் சிறப்பாக அந்த நேரத்தில் mute நிலைக்கு கணினியைத் தன்னியக்கமாகவே அம்மென்பொருள் கொண்டுவரும்.
மென்பொருள் பற்றிய விபரங்களும் பதிவிறக்கம் (DOWNLOAD) செய்வதற்கான இணைப்பையும் இங்கே கிளிக் செய்வதன் மூலம் பெற்றுக் கொள்ள முடியும்.
- உதய தாரகை